Wednesday, July 31, 2013

தேனில் விஷம்


டில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) மாசு கண்காணிப்பு ஆய்வகம் மூலம் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, இந்தியாவில் விற்கப்படும் தேன்களில் antibiotic எனும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் மருந்து கலந்து உள்ளதாக தெரிவிக்கிறது.  மேலும் நடத்தப்பட்ட விசாரணை, இந்தியாவில் இரட்டை தரக்கட்டுபாடு கடைபிடிக்கபடுவதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேனிலும் இதே போன்ற ஆண்டிபயாடிக் கலப்படம் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
டில்லியில் நடத்தப்பட்ட CSE –ன் இந்த ஆய்வு, அங்கு விற்கப்படும் முன்னணி பிராண்டுகளில் கூட அதிக அளவில்  ஆண்டிபயாடிக் உள்ளதை கண்டுபிடித்துள்ளது.
இதில் டாபர் மற்றும் பதஞ்சலி போன்ற உள்நாட்டு மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகளும் (Nectaflor, Capilano) அடங்கும்.
இம்மருந்துகளின் தொடர்ச்சியான நீண்ட கால பயன்பாடு மோசமான உடல் கோளாறுகளையும் மேலும் கிருமிகளிடம் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவிக்கக்கூடும்.
இந்த காரணத்திற்காக பெரும்பாலான நாடுகளில் ஆண்டிபயாடிக் கலந்த உணவு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த மாசு கொண்ட ஏற்றுமதி தேன் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தியா தேன் ஏற்றுமதியில் ஆண்டிபயாடிக் அளவுகளை கட்டுப்படுத்துகிறது, ஆனால் உள்நாட்டு விற்பனையில் முறைப்படுத்துதல் கடைபிடிக்கபடுவதில்லை. இந்திய அரசிடம் நம் நாட்டு மக்களின் ஆரோக்கியதிற்கு முன்னுரிமை இல்லை.
இந்த ஒழுங்குமுறை அலட்சியம் வெளிநாட்டு நிறுவனங்களை, தங்கள் சொந்த நாடுகளில் விற்க அனுமதி இல்லாத அசுத்தமான தேனை நம் நாட்டில் விற்க அனுமதிக்கிறது
உணவு நமது மக்களின் தொழில். ஆனால் அரசு அதை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறது. நம் நாட்டில் உணவு கட்டுப்பாடு மற்றும் முறைப்படுத்துதல் துறை வலுவற்றதாகவும் பொது சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பில் பொறுப்பற்றதாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புது தில்லி, செப்டம்பர் 15, 2010: நல்வாழ்வின் சின்னம் – கோடிக்கணக்கானோர் தூய, இயற்கை மற்றும் ஆரோக்கியமான என்று நம்பி வாங்கும் Nectar தேன் தேனீக்களுக்கு புகட்டப்பட்ட, நம் உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய ஆண்டிபயாடிக் மருந்துகளின் கலப்படமாக இருகின்றது. இது, முன்னர் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக கோலாக்களையும், விஷ வேதிப்பொருட்களுக்காக பொம்மைகளையும் சோதனை செய்த CSE –ன் கண்டுபிடிப்பு. இந்த ஆய்வு, முன்னணி பிராண்டு தேன்கள் கூட அதிக அளவில் – தடை செய்யப்பட்ட chloramphenicol, மேலும் ciprofloxacin மற்றும் erythromycin உள்ளிட்ட ஆண்டிபயாடிக் கலவைகளை கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. இதில் ஏறக்குறைய சந்தையில் விற்கும் அணைத்து தேன் வகைகளும் அடங்கும். முன்னணி இந்திய தேன் உற்பத்தி நிறுவனங்களான டாபர், பைத்யநாத், படாஞ்சலி, காதி மற்றும் ஹிமாலயா, அனைத்தும் 2 முதல் 4 ஆண்டிபயாடிக்குகளை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அதன் தேன்களில் கொண்டிருந்தன. இதைவிட மோசம் என்னெவென்றால் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு இறக்குமதி தேன்களிலும் இதே நிலை இருந்ததுதான். இது அந்த நாடுகளில் கண்டிப்பாக அனுமதிகபட்டிருக்க முடியாது. இது கட்டுப்பாடு ஆணையத்தின் இரட்டை தர முறையையே காட்டுகிறது.
“வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நிலவும் ஒழுங்கற்ற கட்டுபாட்டு முறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. மொத்தத்தில் இந்திய அரசுக்கே தனது மக்களின் சுகாதார நிலை பற்றி கவலை இல்லை என்றால், ஏன் இந்த நிறுவனங்களின் கவலைப்பட வேண்டும்.” இன்று இந்த கண்டுபிடிப்பு வெளியீட்டின் போது CSEன் இயக்குனர் சுனிதா நரேன் இவ்வாறு கூறினார். ஆனால் இந்தியா ஏற்றுமதி செய்யும் தேன்களுக்கு முறையான தரக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகிறது. அனால் உள்நாட்டு விற்பனையில் இந்த கட்டுப்பாடு இல்லை. இது அறவே ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒருபுறம் இருக்க மேலும் CSEன் விசாரணை சர்வதேச தேன் வர்த்தகத்தில் மோசடி, ஏமாற்று மற்றும் சட்டவிரோத நடைமுறைகள் ஓங்கியுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.
இங்கே நமக்கு இரண்டு முக்கிய கேள்விகள், எழலாம்.
1. ஆண்டிபயாடிக் என்பது மருந்து தான். ஆனால் ஏன் தேனில் அவை கலப்படமாக கருதப்படுகிறது?
ஆண்டிபயாடிக்காக இருந்தாலும் அதை தினசரி சிறிய அளவில் நீண்ட காலம் எடுத்துகொண்டால் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உதாரணதுக்கு oxytetracycline என்ற மருந்தை நீண்ட காலம் உட்கொள்ளும்போது இரத்த கோளாறுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பபடலாம்.. ஆனால் இன்னும் முக்கியமாக இது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி மருத்துவ முறைகளில் பெரும் சரிவை  ஏற்படுத்திவிடும்.

2. தேனில் எவ்வாறு ஆண்டிபயாடிக் கலக்கிறது.?
தேனீ வளர்ப்பு தொழிலில் உள்ள பரவும் நோய்களை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க ஆண்டிபயாடிக் பயன்படுத்துகிறது. மேலும் தேனீக்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இது பயன்படுத்தப் படுகிறது. இது தான் தேன்களில் தங்கிவிடுகிறது.
விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு, தொடர்பு சுபர்ணோ பானர்ஜி (souparno@cseindia.org, 9910864339) அல்லது குஷால் P S யாதவ் (kushal@cseindia.org, 9810867667)
CSE ஆய்வு பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.
நன்றி: CSE India.

Monday, February 25, 2013

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...



1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யா விட்டாலும் உரிய காலத்தில், அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. புதிய கார்டு வாங்கினால் உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கார்டை மற்றவர்கள் பயன்படுத்துவதை (ஓரளவு) தடுக்கும்.

3. கிரெடிட் கார்டு தொலைந்து போனால் வங்கியில் புகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்ணை எப்பொழுதும் கையில் வைத்திருங்கள். அதோடு கிரெடிட் கார்டு எண்ணையும் வைத்திருக்க மறந்து விடாதீர்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்து கார்டை செயலிழக்க செய்யுங்கள்.

4. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்பொழுது அவசியம் தேவையான பொருட்கள் மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் பணம் செலுத்த வேண்டும்.

5. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

6. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன் தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பாருங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வங்கிக்கு உடனே புகார் செய்யுங்கள்.

9. அனுமதியின்றி பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை பயனாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

10. வங்கியிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள்.

11. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டு அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின், முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணைப் முறைகேடாக வேறு யாரேனும் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

12. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கதொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரச்னை வந்தால் அவர்கள் தப்பி விடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்ட நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

13. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் இடையே கிரெடிட் கார்டு சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உங்கள் சம்மதம் இன்றியே உங்கள் பணத்தை வங்கி எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது.

14. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் உள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

15. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி நடைமுறை குறை தீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள்.

வங்கி நடைமுறை குறைதீர்ப்பாளர்,
இந்திய ரிசர்வ் வங்கி,
கோட்டைச்சரிவு,
16, இராஜாஜி சாலை,
சென்னை 600001.
தொலைபேசி: 044-25395487,
இணைய முகவரி: www.bankingombudsman.rbi.org.in

Friday, February 22, 2013

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் எடுப்பதற்கு தேவைப்படும் ‘Annexure A’ படிவம்


பாஸ்போர்ட் எடுப்பதற்கு பல ஆவணங்கள் நாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று பிறப்பு சான்றிதழ். சிலசமயம் நம்மிடம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் இருக்கலாம். உதரணமாக பள்ளி சான்றிதழும் இல்லாமல் முனிசிபாலிட்டி சான்றிதழும் இல்லாமல் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இந்த ஆவணங்களுக்கு மாற்றாக அரசு ‘Annexure A’ என்ற படிவத்தை அனுமதித்து இருக்கிறது. இந்த ‘Annexure A’ படிவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த படிவ மாதிரியை http://passportindia.gov.in என்ற வலை தளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். இந்த படிவத்தை குறைந்த பட்ச நீதித்துறை சாராத முத்திரை தாளில்(Non- Judicial Stamp Paper)  அச்சடித்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி நோட்டரி பப்ளிக் (Notary Public) சான்று பெற வேண்டும். நோட்டரி பப்ளிக் என்பவர் ஒரு அட்வகேட் / வக்கீல். மாவட்ட நீதி மன்றங்களில் நீங்கள் நோட்டரி பப்ளிக்கை அணுகலாம். அவர்களே நாம் கொண்டு செல்லும் ஆவணத்தில் சான்றளித்து முத்திரையிட்டு(Stamp) கொடுப்பார்கள். இதற்காக நோட்டரி பப்ளிக் உண்டான தொகையை கொடுக்க வேண்டும். கோர்ட் அருகமையிலேயே நீங்கள் ஆவணத்தை டைப் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.

கீழே காட்டப்பட்டுள்ளது ‘Annexure A’ -வின் மாதிரி.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.