Sunday, January 16, 2011

ரவைப் பணியாரம்




(Rava Paniyaaram)

தேவையானவை:


ரவை - 500 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
வாழைப்பழம் - 1
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - 1/2 தே.கரண்டி
சமையல் சோடா -  1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

1. முதலில் தேங்காயை அரைத்து முதல் பால் எடுத்து ரவையில் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. மீதமுள்ள அரைத்த தேங்காயை வைத்து இரண்டாவது பால் சிறிது எடுத்து கொள்ளவும்.
3. பிறகு சர்க்கரை மற்றும் வாழைப்பழம், இவற்றுடன் சிறிது இரண்டாவது எடுத்த பாலை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து ஊறிய ரவையில் ஊற்றவும்.
4. அதில் சமையல் சோடா மற்றும் உப்பை சேர்த்து கலக்கவும்.
5. சர்க்கரை வாழைப்பழ கலவையை கலந்தவுடன் மாவு சிறிது நீர்த்து விடும். அதனால் மேலும் சிறிது ரவை சேர்த்து கட்டி விழாமல் சிறது கெட்டியாகும் வரை கலக்கவும். எண்ணையில் எடுத்து போடும் அளவுக்கு பதம் இருக்க வேண்டும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விட்டு, சிறு சிறு பிடியாக எடுத்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment